மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
ரசிகர்கள் இவரை ‘லார்டு தாக்குர்’ என அழைப்பது அன்பின் நிமித்தமாக என போட்டிக்குப் பிறகான நேர்காணலில் ஷர்துல் தாக்குர் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஷர்துல் தாக்குர் (34 வயது) இதுவரை 7 ஐபிஎல் அணிகளில் விளையாடியுள்ளார். தனது சொந்த ஊரான மும்பைக்கு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.
தனது முதல் போட்டியிலேயே ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதும் வென்றார். ரசிகர்கள் இவரை ’லார்டு தாக்குர்’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பார்கள்.
இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் 110 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 7ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். மும்பைக்கு தனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குர் பேசியிருப்பதாவது:
இது மக்கள் அளித்த பெயர். அது மீம் மூலமாக வந்த பெயர் அல்ல; ஆனால், அது அன்பின் நிமித்தமாக வைத்த ஒரு நேர்மறையான விஷயம். நீங்கள் நன்றாக விளையாடும்போது மக்கள் உங்கள் மீது மக்கள் அன்பு காட்டுவார்கள்.
இந்தத் திடல் எனக்கு கசப்பான, இனிமையான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. மும்பைக்காக விளையாடுவது சிறப்பானது. 2010ல் நான் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளேன். கடைசியாக எனது சொந்த அணிக்காக விளையாடியுள்ளேன் என்றார்.
Traded in, trusted, deliveredð
— Around Sports (@SportsAround7) March 29, 2026
Lord Shardul Thakur makes an instant impact for Mumbai Indians with a match-defining spellð pic.twitter.com/pVi7MlERLi
Summary
'Not A Meme, It's Love': Shardul Thakur Embraces 'Lord' Tag After Match-Winning MI Debut.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










