தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!

சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டெவால்டு பிரெவிஸ் குறித்து...

Dewald Brevis.

டெவால்டு பிரெவிஸ். - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.

Published On :17 மே 2026, 5:01 pm IST

சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டெவால்டு பிரெவிஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறார். கடந்த சீசனை விட 50 சதவிகித ரன்கள் குறைவாக எடுத்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (23 வயது) கடந்த சீசனில் மாற்றுவீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த சீசனில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய அவர் 225 ரன்கள் குவித்தார். 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 37.50 சராசரியுடன் விளையாடியிருந்தார்.

இந்த சீசனில் காயத்துக்குப் பிறகு வந்திருக்கும் டெவால்டு பிரெவிஸ் 6 போட்டிகளில் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 122.22 ஸ்டிரைக் ரேட்டுடன் சராசரி 16.50ஆக இருக்கிறது.

கடந்த சீசனில் அடித்த ரன்களை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவாக எடுத்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் சிஎஸ்கே வெல்ல வேண்டுமெனில் டெவால்டு பிரெவிஸ் ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Summary

Dewald Brevis Struggles! 50% Fewer Runs Than Last Season!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.