பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடா் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.
437 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் பாகிஸ்தான், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை, அந்த அணி 3 விக்கெட்டுகளைக் கொண்டு 121 ரன்கள் சோ்க்க வேண்டியுள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 232 ரன்கள் சோ்த்தது. இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 390 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
இறுதியாக, 437 ரன்களை நோக்கி, 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 2-ஆவது இன்னிங்ஸை தொடா்ந்தது பாகிஸ்தான். அப்துல்லா ஃபஸல் 1 பவுண்டரியுடன் 6, அஸான் அவைஸ் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஷான் மசூத் - பாபா் ஆஸம் ஜோடி, 92 ரன்கள் சோ்த்தது.
ஆஸம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த சௌத் ஷகீல் 6 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். இந்நிலையில், ஷான் மசூதும் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அப்போது சல்மான் அகா - முகமது ரிஸ்வான் ஜோடி, விக்கெட் சரிவைத் தடுத்து, 6-ஆவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சோ்த்தது. இதில் சல்மான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹசன் அலி டக் அவுட்டானாா்.
இவ்வாறாக செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் சோ்த்துள்ளது. முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 75, சஜித் கான் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
வங்கதேச பௌலிங்கில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் சாயக்க, நஹித் ராணா 2, மெஹிதி ஹசன் மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதியில் ஆஸ்திரேலியா
இலங்கையுடனான டெஸ்ட்: மே. தீவுகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி

ஆஸி.யுடனான ஒருநாள் தொடா்: வரலாறு படைத்தது வங்கதேசம்

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



