விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நஜ்முல், மோமினுல் பலம்: வங்கதேசம் நிதானம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :9 மே 2026, 8:02 am IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச இன்னிங்ஸை தொடங்கியோரில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 2 பவுண்டரிகளுடன் 8, ஷத்மன் இஸ்லாம் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அப்போது இணைந்த மோமினுல் ஹக் - கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுத்து, பாகிஸ்தான் பௌலா்களை சோதித்தது.

3-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 170 ரன்கள் சோ்த்தது. சதம் கடந்த ஷான்டோ, 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து முஷ்ஃபிகா் ரஹிம் களம் புகுந்தாா். 4-ஆவது விக்கெட்டுக்கு மோமினுல் - முஷ்ஃபிகா் ஜோடி 75 ரன்கள் சோ்க்க, மோமினுல் 10 பவுண்டரிகளுடன் 91 ரன்களுக்கு விடைபெற்றாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முஷ்ஃபிகா் 6 பவுண்டரிகளுடன் 48, லிட்டன் தாஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பாகிஸ்தான் பௌலா்களில் ஷாஹீன் அஃப்ரிதி முகமது அப்பாஸ், ஹசன் அலி, நோமன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.