விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கெதர் ஜாதவின் காயம் குணமாகும் வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு! 

உலகக் கோப்பைக்கான ஐசிசி விதிமுறைகளின்படி, மே 23 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம்...

News image
Updated On :9 மே 2019, 11:49 am IST

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 14-வது ஓவரின்போது ஃபீல்டிங் செய்ய முயன்ற நிலையில் தடுமாறி கீழே விழுந்தார் ஜாதவ். இதில் அவருடைய தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள சிஎஸ்கே ஆட்டங்களில் ஜாதவ் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறினார். இதனால் அவர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

உலகக் கோப்பைக்கான ஐசிசி விதிமுறைகளின்படி, மே 23 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். இந்திய அணியின் பிஸியோ பாட்ரிக் ஃபர்ஹர்ட், ஜாதவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கவனித்து வருகிறார். இதையடுத்து ஜாதவின் காயம் விரைவில் குணமாகிவிடும், இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பு அவர் நல்ல உடற்தகுதியை அடைந்துவிடுவார் என்று இந்தியத் தேர்வுக்குழுவுக்கு ஃபர்ஹர்ட் தகவல் அளித்துள்ளார்.

இந்திய அணி மே 22 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறது. ஜூன் 5 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது இந்திய அணி. அதற்குள் ஜாதவின் காயம் குணமாகிவிடும் என்பதால், இந்த நிலையில் ஜாதவுக்கு ஆதரவு அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. 

இதையும் தாண்டி, ஜாதவால் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனால்  ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு, அக்‌ஷர் படேல், நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ஆகிய 5 வீரர்களில் இருந்து ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்யும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.