பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.