ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கில் அதிரடி தொடக்கம்: இலக்கை எட்டுமா கொல்கத்தா? கட்டுப்படுத்துமா பெங்களூரு?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் 139 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவர் பிளேவில் அதிரடி காட்டி வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2021, 4:26 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் 139 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவர் பிளேவில் அதிரடி காட்டி வருகிறது.

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். முதல் ஓவரில் கில் பவுண்டரியும், இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் சிக்ஸரும் அடித்து அதிரடி தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டனர். 3-வது ஓவரில் முகமது சிராஜ் 3 ரன்கள் மட்டும் கொடுத்துக் கட்டுப்படுத்தினாலும், 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசி மீண்டும் அதிரடிக்கு மாறினார்.

சிராஜ் மீண்டும் நல்ல ஓவரை வீசி பவுண்டரிகள் கொடுக்காமல் 5-வது ஓவரைப் போட்டார். பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேலை அறிமுகப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.

அவரும் தனது வழக்கமான பாணியில் மெதுவாகப் பந்துவீசி கில் விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.