தொடர் தோல்விகள்: ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?

விளையாட்டு ஜாம்பவான்கள் பலரும் தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
தொடர் தோல்விகள்: ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?
Updated on
1 min read

விளையாட்டு ஜாம்பவான்கள் பலரும் தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு ட்விட்டரில் ரோஹித் சர்மா கூறியதாவது:

இந்தமுறை சிறந்த ஆட்டத்திறனை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இதுபோல சிலசமயங்களில் நடக்கும். விளையாட்டு ஜாம்பவான்கள் இத்தருணத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த அணியும் அதன் சூழலும் எனக்குப் பிடித்துள்ளது. மும்பை அணி மீது எப்போதும் நம்பிக்கை வைக்கும் ரசிகர்களுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com