ஏமாற்றமளித்த ராஜஸ்தான்: குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஏமாற்றமளித்த ராஜஸ்தான்: குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு
Published on
Updated on
1 min read


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வருகிறது. 

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிவருகின்றன. 

முதலில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தயாள் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தூக்கியடிக்க சாய் கிஷோரிடம் பந்து சிக்கியது. இதனால் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 

அதிரடியாக ஆடிவந்த ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். எனினும் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தொடர்ந்து வந்த படிக்கல் (2), ஹிட்மயர் (11), அஸ்வின் (6), போல்ட் (11) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன் விகிதம் மந்தநிலையிலேயே இருந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இரண்டாவது குறைந்தபட்ச ரன் குவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com