குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

டெல்லி - பஞ்சாப் ஆட்டம் மும்பைக்கு மாற்றம்

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதும் ஆட்டம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:31 pm IST

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதும் ஆட்டம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி அணியில் ஆல்-ரவுண்டா் மிட்செல் மாா்ஷ் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், மும்பையிலிருந்து புணேவுக்கு நீண்ட தூர பேருந்து பயணம் காரணமாக அணியினரிடையே அறியாத வகையில் தொற்று பாதிப்பு மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக ஆட்டம் புணேவிலிருந்து மும்பைக்கு இடமாற்றப்படுவதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதையடுத்து மும்பையில் இருந்து செவ்வாய்க்கிழமை புணே புறப்பட இருந்த பஞ்சாப் அணி, மும்பையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருக்கும் டெல்லி வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும், புதன்கிழமை காலை மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே டெல்லி அணி விளையாட அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.