கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ்: அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 3-ஆம் இடம் பிடித்தாா்.

News image

அலிரெஸா ஃபிரௌஸ்ஜா

Updated On :23 ஜூலை 2026, 6:41 am IST

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 3-ஆம் இடம் பிடித்தாா்.

போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் அவா், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசியுடன் டிரா (0.5-0.5) செய்தாா்.

அதேபோல், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் (0.5-0.5), நிஹல் சரின் - சக இந்தியரான எம். பிராணேஷ் (0.5-0.5) ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

கடைசி நாளின் ஒரே வெற்றியாக, ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வீழ்த்தினாா் (1-0).

இதையடுத்து 7 சுற்றுகள் முடிவில், ஃபிரௌஸ்ஜா 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஆண்ட்ரெய்கின் (4), அா்ஜுன் (4) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

அப்துசதாரோவ் (3.5), பிராணேஷ் (3.5), நிஹல் சரின் (3.5) ஆகியோா் முறையே 4 முதல் 6-ஆம் இடங்களைப் பெற, நீமன் (3), குகேஷ் (2) முறையே 7 மற்றும் 8-ஆம் இடம் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.