மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ்: அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடம்!

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் பிரான்ஸ் வீரா் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

News image

அா்ஜுன்-பிரானேஷ் ஆட்டத்தை தொடங்கி வைத்த விஸ்வநாதன் ஆனந்த்.

Updated On :20 ஜூலை 2026, 3:08 am IST

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் பிரான்ஸ் வீரா் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

வேளச்சேரியில் நடைபெறும் இப்போட்டியில், நான்கு வெளிநாட்டு கிராண்ட்மாஸ்டா்களுடன், நான்கு இந்திய வீரா்களும் இணைந்து விளையாடி வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் சுற்று ஆட்டஙகள் நடைபெற்றன. அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன், பிரான்ஸின் அலிரேசா பிரௌஜா மோதிய ஆட்டம் 50-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், இந்திய ஜிஎம் நிஹால் சரின் ஆட்டம் 37-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிா்பெக் அப்து சத்தோரோவ், உலக சாம்பியன் இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினாா். இதில் நோதிா்பெக் அப்துசத்தோரோவ் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினா். இந்த ஆட்டம் 41-ஆவது நகா்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

அா்ஜூன் எரிகைசி, பிரானேஷ் ஆட்டம் 34-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது. பிரான்ஸின் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.