சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஐபிஎல்: விதிமுறையை மீறிய கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ்

ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னெள கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னெள கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லக்னெள அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற்ற ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாய்னிஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஹேசில்வுட் பந்தில் போல்ட் ஆன ஸ்டாய்னிஸ், கோபத்தில் நடுவர் பக்கம் திரும்பி கோபத்துடன் பேசியபடி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.     இதன் காரணமாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.