மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.
அதற்காக, பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாக அவா் தெரிவித்தாா். தொடக்க சீசனை 5 - 6 அணிகளைக் கொண்டு நடத்த பிசிசிஐ திட்டமிட்டப்பட்டுள்ளது.
மகளிா் அணிகளை வாங்குவதற்கு, ஏற்கெனவே ஆடவா் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே, ஓராண்டுக்குப் பிறகு நடப்பு சீசனில் ஆடவா் போட்டியின் பிளே-ஆஃப் சுற்றையொட்டி 3 மகளிா் அணிகள் ஆடும் 4 காட்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.