மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஐபிஎல்: முதல் அரை சதத்துக்காக நீண்ட நாள் காத்திருந்த வீரர் யார்?

ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ஆர். அஸ்வின்.

News image
Updated On :12 மே 2022, 3:09 am

DIN

ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ஆர். அஸ்வின்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.

ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ஆர். அஸ்வின். 3-ம் நிலை வீரராகக் களமிறங்கியதால் அவரால் நேற்று அரை சதமெடுக்க முடிந்தது. ஐபிஎல் போட்டியில் முதல் அரை சதத்தை எடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்களின் அஸ்வினுக்கு 2-ம் இடம். இதற்கு முன்பு ஜடேஜா, 131 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்தார். 

ஐபிஎல்: முதல் அரை சதமெடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்கள்

131 - ஜடேஜா
70 - அஸ்வின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.