ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களே எடுத்தது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 37 பந்துகளில் 63 ரன்கள், பௌலிங்கில் 3 ஓவர்களுக்கு 33 ரன்கள் 1 விக்கெட், 1 கேட்ச் என ஃபீல்டிங்கிலும் அசத்தினார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற நிதீஷ் குமார் ரெட்டி கூறியதாவது:
எனது அணிக்கும் எனக்கும் இது மிகப்பெரிய பங்களிப்பு. நான் எப்போதும் எனக்குள்ளே சொல்லிகொள்ளும் விசயம் என்னை நான் முதலில் நம்பவேண்டும் என்பதே. பஞ்சாப் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பால்க வீசினார்கள். அதனால் ஸ்பின்னருக்காக காத்திருந்தேன். அதன்படியே அவர்கள் பந்து வீசியதும் அவர்களை டார்கெட் செய்து அடித்தேன். இந்தத் தொடர் முழுவதும் மெதுவான பௌன்சர்கள் மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. ஆடுகளத்தின் வடிவத்துக்கு ஏற்ப எந்தப் பக்கம் சிக்ஸர்கள் அடிக்க கடினமோ அந்தப் பக்கம் பந்துகள் வீசி விக்கெட் எடுத்தேன். பேட்டிங்,பௌலிங், ஃபீல்டிங்கில் இதே மாதிரியான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென நினைக்கிறேன் எனக் கூறினார்.
கேப்டன் கம்மின்ஸ் இவரை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சூப்பர் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
He promised, and he delivered in style ð¤©ð¥#PlayWithFire pic.twitter.com/XU44dYGtXD
— SunRisers Hyderabad (@SunRisers) April 10, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






