அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

News image

டேனியல் வெட்டோரி - படம் |சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)

Updated On :14 ஏப்ரல் 2024, 9:53 pm IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் திறமையை எந்த ஒரு அணியும் குறைத்து மதிப்பிடுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் மிகச் சிறந்த அணி. அவர்களை வீழ்த்த வேண்டுமென்றால், நமது கடின உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் கடினமானது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறாத போட்டிகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றார்.

ஐபிஎல் தொடரில் நாளை (ஏப்ரல் 15) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.