இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் 250 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாகி வருகிறது. ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினார். அவர் முதல் நாளிலில் இருந்தே அற்புதமாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட்டிங்கின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது என்றார்.
நேற்றையப் போட்டியில் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் அதிரடியாக 84 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.