திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) நியமித்துள்ளது.

News image

படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :28 ஏப்ரல் 2024, 3:55 pm IST

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) நியமித்துள்ளது.

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஸார் மஹ்மூத் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது: மிகச் சிறந்த பயிற்சியாளர்களான கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரும் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டதிலிருந்தே பாகிஸ்தான் அணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பயிற்சி கிடைக்க வேண்டும் என நினைத்தோம். அதன் காரணத்தினால் கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரையும் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரிலிருந்து கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படத் தவறியது. இதனால், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.