நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டனை தோனி உருவாக்குவார்: அம்பத்தி ராயுடு

இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனை எம்.எஸ்.தோனி உருவாக்கவுள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி

Updated On :16 மார்ச் 2024, 4:46 pm IST

ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனை எம்.எஸ்.தோனி உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக மகேந்திர சிங் தோனி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியான தோல்விகளின் காரணத்தினால் தொடரின் பாதியில் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகினார். தோனி மீண்டும் அணியின் கேப்டனாக மாறினார். அதன்பின், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

42 வயதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

Story image

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனை எம்.எஸ்.தோனி உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி ஆட்டத்தின் பாதியில் எம்.எஸ்.தோனி அணியின் புதிய கேப்டனாக யாரேனும் ஒருவரை முன்னிறுத்த வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுவதற்கான ஆண்டாக இருக்கலாம். அவர் மேலும் ஒரு சில ஆண்டுகள் விளையாட விரும்பினால், அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார். அவரை சென்னை அணியின் கேப்டனாக மேலும் சில ஆண்டுகளுக்குப் பார்க்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.