சிஎஸ்கேவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகப் பெரிய இடத்தினை நிரப்ப வேண்டிய கட்டாயம் உனக்கிருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. ஆனால், உனது பொறுமையான குணம் சிஎஸ்கேவின் பாரம்பரியத்தை உன்னுடைய பாணியில் முன்னோக்கி கொண்டு செல்லும். அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்துகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மும்பை அணிக்கு அடுத்த கேப்டனாக சூர்யகுமார் அல்லது பும்ரா நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.