நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அபிஷேக் போரெல் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 175 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அபிஷேக் போரெல்

Updated On :23 மார்ச் 2024, 6:21 pm IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சண்டீகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். டேவிட் வார்னர் 29 ரன்கள் எடுத்தும், சாய் ஹோப் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கார் விபத்துக்குப் பிறகு குணமடைந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அக்‌ஷர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் இறுதியில் அபிஷேக் போரெல் 10 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி அசத்தினார். இறுதியில் தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரபாடா, ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது. பவர் பிளே முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.