ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.
17-வது ஐபிஎல் சீசன் நேற்று (மார்ச் 22) கோலகலமாகத் தொடங்கியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் முதல் போட்டியில் சிஎஸ்கே எளிதில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 34 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் ஆட்டம் சிறப்பானதாக அமைந்தது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை நான் எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன். இதனை ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுத்த முயற்சி செய்வேன் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற மார்ச் 26 ஆம் தேதி தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?
கார்த்திக் சர்மா, துபே அதிரடி... லக்னௌவுக்கு 188 ரன்கள் இலக்கு!

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





