ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஏஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து விரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியில் ரூ. 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி விளையாடினார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தினார்.
டு பிளெஸ்ஸி அடித்த பந்தினை ஓடி வந்து பிடித்து ஃபீல்டிங்கிலும் அசத்தினார். ரஹானே கேட்ச்சிலும் உதவியாக இருந்து கேட்ச் பிடித்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் என்ற விருதினைப் பெற்றார்.
விருது பெற்ற பிறகு பேசியதாவது:
ஒரு அணியாக முழுமையான செயல்பாடாக பார்க்கிறேன். 3-4 நாள்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறினேன். பயிற்சி எடுத்த களம் வேறு மாதிரி இருந்தது. நான் சிறப்பாக விளையாடினேனா தெரியவில்லை. தொடக்கத்தில் எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்தது. பின்னர் அதுவே எனக்கு உதவியது. இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை நான் பார்த்தே இல்லை. இவர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.