நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இவர்கள் இருவரின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனை: ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தின் திருப்புமுனை குறித்து சிஎஸ்கே-வின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.

News image

ருதுராஜ் கெய்க்வாட் - படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :23 மார்ச் 2024, 8:14 pm IST

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தின் திருப்புமுனை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.

17-வது ஐபிஎல் சீசன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார் கெய்க்வாட்.

இந்த நிலையில், டு பிளெஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

Story image

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. 2-3 ஓவர்களில் ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்தோம். ஆனால், முஸ்தஃபிசூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசத் தொடங்கிய பிறகு, நாங்கள் மீண்டும் ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். டு பிளெஸ்ஸி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரின் விக்கெட்டினையும் அடுத்தடுத்து கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.