பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மும்பைக்காக 200வது போட்டியில் ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

News image

ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)

Updated On :27 மார்ச் 2024, 4:57 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

2008இல் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளை விளையாடினார் ரோஹித் சர்மா. 2008-2010 வரை அந்த அணிக்காக மட்டும் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் 2011 முதல் மும்பை இந்தியனஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மும்பை அணிக்காக 199 போட்டிகளில் விளையாடி 5,084 ரன்கள் அடித்துள்ளார்.

மொத்தமாக 244 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6,254 ரன்கள் அடித்துள்ளார். இதில் 42 அரைசதம், 1 சதம் அடங்கும். சராசி 29.64. ஸ்டிரைக் ரேட் 130.16 ஆகும்.

மும்பை அணிக்காக கேப்டன்சி செய்து 5 முறை கோப்பையை வென்று தந்துள்ளார் ரோஹித் சர்மா. தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

சன் ரைசரஸ் ஹைதராபாத் அணிக்காக எதிராக இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணிக்காக மட்டும் 200வது போட்டியில் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.