பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மும்பைக்காக 200வது போட்டியில் ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

2008இல் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளை விளையாடினார் ரோஹித் சர்மா. 2008-2010 வரை அந்த அணிக்காக மட்டும் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் 2011 முதல் மும்பை இந்தியனஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மும்பை அணிக்காக 199 போட்டிகளில் விளையாடி 5,084 ரன்கள் அடித்துள்ளார்.

மொத்தமாக 244 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6,254 ரன்கள் அடித்துள்ளார். இதில் 42 அரைசதம், 1 சதம் அடங்கும். சராசி 29.64. ஸ்டிரைக் ரேட் 130.16 ஆகும்.

மும்பை அணிக்காக கேப்டன்சி செய்து 5 முறை கோப்பையை வென்று தந்துள்ளார் ரோஹித் சர்மா. தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

சன் ரைசரஸ் ஹைதராபாத் அணிக்காக எதிராக இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணிக்காக மட்டும் 200வது போட்டியில் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.