பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மற்ற அணிகளைவிட சிஎஸ்கே வித்தியாசமானது: ஆட்ட நாயகன் ஷிவம் துபே!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

News image

ஷிவம் துபே. - R Senthilkumar

Updated On :27 மார்ச் 2024, 4:49 pm IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மிகப் பெரிய வெற்றியைப் (63 ரன்கள் வித்தியாசத்தில் ) பெற்றது.

இந்தப் போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் அடித்த ஷிவம் துபே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிகமாக சிக்ஸர் அடிப்பதால் துபேவை சென்னை ரசிகர்கள் ‘ஆறுச்சாமி’ என அன்போடு அழைக்கிறார்கள்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே, “சிஎஸ்கே மற்ற அணிகளை விட வித்தியாசமானது. இந்த நிர்வாகம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனால் அவர்களுக்கு சில வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும். எனக்கு எதிராக பௌன்சர் பந்துகளை வீசுவார்களெனத் தெரியும். நான் அதற்கேற்ப பயிற்சி எடுத்து தயாராக இருக்கிறேன். அணி நிர்வாகம் என்னிடம் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. நான் அதைதான் செய்கிறேன்” எனக் கூறினார்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டிக்குப் பின்பு அளித்த பேட்டியில், “தோனியும் அணி நிர்வாகமும் துபேவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் பங்காற்றியுள்ளார்கள். துபே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்” எனக் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் மைக் ஹஸி, “பௌன்சர் பந்துகளுக்கு எதிராக துபே தனியாக பயிற்சி எடுத்து வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் பௌன்சர் பந்துகளுக்கு தடுமாறிய ஷிவம் துபே தற்போது சிறப்பாக விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.