எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மற்ற அணிகளைவிட சிஎஸ்கே வித்தியாசமானது: ஆட்ட நாயகன் ஷிவம் துபே!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

News image

ஷிவம் துபே. - R Senthilkumar

Updated On :27 மார்ச் 2024, 4:04 pm IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மிகப் பெரிய வெற்றியைப் (63 ரன்கள் வித்தியாசத்தில் ) பெற்றது.

இந்தப் போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் அடித்த ஷிவம் துபே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிகமாக சிக்ஸர் அடிப்பதால் துபேவை சென்னை ரசிகர்கள் ‘ஆறுச்சாமி’ என அன்போடு அழைக்கிறார்கள்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே, “சிஎஸ்கே மற்ற அணிகளை விட வித்தியாசமானது. இந்த நிர்வாகம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனால் அவர்களுக்கு சில வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும். எனக்கு எதிராக பௌன்சர் பந்துகளை வீசுவார்களெனத் தெரியும். நான் அதற்கேற்ப பயிற்சி எடுத்து தயாராக இருக்கிறேன். அணி நிர்வாகம் என்னிடம் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. நான் அதைதான் செய்கிறேன்” எனக் கூறினார்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டிக்குப் பின்பு அளித்த பேட்டியில், “தோனியும் அணி நிர்வாகமும் துபேவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் பங்காற்றியுள்ளார்கள். துபே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்” எனக் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் மைக் ஹஸி, “பௌன்சர் பந்துகளுக்கு எதிராக துபே தனியாக பயிற்சி எடுத்து வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் பௌன்சர் பந்துகளுக்கு தடுமாறிய ஷிவம் துபே தற்போது சிறப்பாக விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.