குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப் பெரிய தோல்வியை (63 ரன்கள் வித்தியாசத்தில் ) சந்தித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மெதுவாக பந்து வீசியதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அபராதம் பெறுபவர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் மும்பையை வென்ற குஜராத் சிஎஸ்கேவிடம் தோற்றதால் தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியும் (தலைமைப் பண்பும்) கேள்விக்குறியாகியுள்ளது. முதல் போட்டியில் செய்தது போலவே 2வது போட்டியிலும் அதே மாதிரியான வீரர்களுக்கு முதல் 12 ஓவர்களை வீச வைத்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




