எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

News image
ஷுப்மன் கில் (வலது பக்கம்)
Updated On :27 மார்ச் 2024, 10:44 am

DIN

குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப் பெரிய தோல்வியை (63 ரன்கள் வித்தியாசத்தில் ) சந்தித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மெதுவாக பந்து வீசியதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அபராதம் பெறுபவர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் மும்பையை வென்ற குஜராத் சிஎஸ்கேவிடம் தோற்றதால் தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

ஷுப்மன் கில்லின் கேப்டன்சியும் (தலைமைப் பண்பும்) கேள்விக்குறியாகியுள்ளது. முதல் போட்டியில் செய்தது போலவே 2வது போட்டியிலும் அதே மாதிரியான வீரர்களுக்கு முதல் 12 ஓவர்களை வீச வைத்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.