குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப் பெரிய தோல்வியை (63 ரன்கள் வித்தியாசத்தில் ) சந்தித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மெதுவாக பந்து வீசியதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அபராதம் பெறுபவர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் மும்பையை வென்ற குஜராத் சிஎஸ்கேவிடம் தோற்றதால் தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியும் (தலைமைப் பண்பும்) கேள்விக்குறியாகியுள்ளது. முதல் போட்டியில் செய்தது போலவே 2வது போட்டியிலும் அதே மாதிரியான வீரர்களுக்கு முதல் 12 ஓவர்களை வீச வைத்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

நாங்கள் தோல்விக்குத் தகுதியானவர்கள்..! மனம் திறந்த குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




