முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

முகமது சிராஜின் தன்னம்பிக்கையே அவரது உண்மையான பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுநீல் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.
முகமது சிராஜ்
முகமது சிராஜ்படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

முகமது சிராஜின் தன்னம்பிக்கையே அவரது உண்மையான பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுநீல் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

முகமது சிராஜ்
ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

இந்த நிலையில், முகமது சிராஜின் தன்னம்பிக்கை மற்றும் போராடும் குணமே அவரது உண்மையான பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுநீல் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுநீல் காவஸ்கர்
சுநீல் காவஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒவ்வொரு முறை முகமது சிராஜ் பந்துவீச்சை பார்க்கும்போதும், அவர் கடினமாக உழைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது தந்தை இறந்தபோது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்தார். தந்தை இறந்தபோது கூட அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை முக்கியமாகக் கருதினார். அணியில் சிறப்பாக விளையாடி தனக்கான இடத்தை உறுதிப்படுத்திய வீரர்கள் கூட கண்டிப்பாக இந்த மாதிரியான சூழலில் சென்றிருப்பார்கள். ஆனால், சிராஜ் அதனை செய்யவில்லை. காபா டெஸ்ட் போட்டியில் அவர் எப்படி சிறப்பாக பந்துவீசினார் என்பது உங்களுக்குத் தெரியும். தன்னம்பிக்கையும், போராடும் குணமுமே அவரது உண்மையான பலம் என்றார்.

முகமது சிராஜ்
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com