நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து மயங்க் யாதவ் விலகுவதாக லக்னௌ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
மயங்க் யாதவ்
மயங்க் யாதவ்
Published on
Updated on
1 min read

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து மயங்க் யாதவ் விலகுவதாக லக்னௌ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக மயங்க் யாதவ் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயங்க் யாதவ்
ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

இது தொடர்பாக லக்னௌ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசியதாவது: லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. காயம் ஏற்பட்டுள்ளது ஸ்கேனில் உறுதியானது. அவர் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் இல்லாதது எங்களுக்கு துரதிருஷ்டவசமானது. அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com