முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் பேட்டியளித்துள்ளார்.

News image

சுனில் நரைன் - படங்கள்: கேகேஆர் / எக்ஸ்

Updated On :10 மே 2024, 6:17 pm IST

இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ) அணி சிறப்பாக விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதில் சுனில் நரைனின் பங்கு முக்கியமாக உள்ளது.

பேட்டிங்கில் 461 ரன்கள், பௌலிங்கில் 14 விக்கெட்டுகள் என ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். இவரது சிறந்த செயல்பாடுகளைப் பார்த்த மே.இ.தீ. அணியின் கேப்டன் ரோமன் பவல் உலகக் கோபையில் விளையாட ஒரு வருடமாக சுனில் நரைனை கேட்டுக்கொண்டு உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

விக்கெட் எடுத்தாலும் ரன் அடித்தாலும் பெரிதாக கொண்டாடாத வீரராக இருப்பவர் சுனில் நரைன். சமீபத்தில் ஆவேஷம் படத்தின் ரீல்ஸை செய்திருந்தார். அதிலும் சிரிக்காமலே செய்திருப்பார்.

இந்நிலையில் கேகேஆர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விக்கெட் எடுத்தால் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுனில் நரைன், “வளரும் பருவத்தில் நான் எனது தந்தையிடம் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால் இன்று நான் ஒருவரை விக்கெட் எடுத்தால் நாளை அல்லது அடுத்த நாள் எப்போதாவது மீண்டும் அவருடன் விளையாட நேரிடும். அதனால் அந்தக் கணத்தை மட்டுமே நேசிக்க வேண்டுமே தவிர அதீதமாக கொண்டாடக்கூடாது” எனக் கூறினார்.

ரசிகர்கள் இவரது கருத்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.