இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ) அணி சிறப்பாக விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதில் சுனில் நரைனின் பங்கு முக்கியமாக உள்ளது.
பேட்டிங்கில் 461 ரன்கள், பௌலிங்கில் 14 விக்கெட்டுகள் என ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். இவரது சிறந்த செயல்பாடுகளைப் பார்த்த மே.இ.தீ. அணியின் கேப்டன் ரோமன் பவல் உலகக் கோபையில் விளையாட ஒரு வருடமாக சுனில் நரைனை கேட்டுக்கொண்டு உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
விக்கெட் எடுத்தாலும் ரன் அடித்தாலும் பெரிதாக கொண்டாடாத வீரராக இருப்பவர் சுனில் நரைன். சமீபத்தில் ஆவேஷம் படத்தின் ரீல்ஸை செய்திருந்தார். அதிலும் சிரிக்காமலே செய்திருப்பார்.
இந்நிலையில் கேகேஆர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விக்கெட் எடுத்தால் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுனில் நரைன், “வளரும் பருவத்தில் நான் எனது தந்தையிடம் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால் இன்று நான் ஒருவரை விக்கெட் எடுத்தால் நாளை அல்லது அடுத்த நாள் எப்போதாவது மீண்டும் அவருடன் விளையாட நேரிடும். அதனால் அந்தக் கணத்தை மட்டுமே நேசிக்க வேண்டுமே தவிர அதீதமாக கொண்டாடக்கூடாது” எனக் கூறினார்.
ரசிகர்கள் இவரது கருத்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு




