ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கடுமையாக போட்டியிட்டுக் கொள்கின்றன.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக மெதுவாக ஓவர் வீசியதால் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு நாளை பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிமுறையை மீறியதால், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் இறுதி ஓவரை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீசவில்லை. தில்லி அணி ஓவர் வீசுவதற்கு 10 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற நாளை நடைபெறவிருக்கும் பெங்களூருவுக்கு எதிரான போட்டி தில்லி கேப்பிடல்ஸுக்கு முக்கியமானதாக உள்ள நிலையில், ரிஷப் பந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

விளையாட்டு துளிகள்...

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




