நடப்பு ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீர், மிட்செல் ஸ்டார்க் மிகச் சிறந்த வீரர், அவர் மீது நம்பிக்கையுள்ளது என தெரிவித்திருந்தார். கம்பீர் கூறியது போலவே, குவாலிஃபையர் 1 மற்றும் ஐபிஎல் இறுதிப்போட்டி என இரண்டிலும் மிட்செல் ஸ்டார்க் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரை பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்தது சரியான முடிவே என கருதும்படியாக ஸ்டார்க் செயல்பட்டார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.