டார்-ஆர்டர் பேட்டர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்: ஃபிளெமிங்

சிஎஸ்கே அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் குறித்து...
சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் டார்-ஆர்டர் வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பையுடன் வென்றது. பின்னர், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளது.

குறிப்பாக சேப்பாக்கத்தில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே மிகக் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

சிஎஸ்கே அணியின் டாப்-ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டர்கள் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது:

விஜய் சங்கர் முழுவதுமாக போராடிக்கொண்டு இருந்தார். அவருக்கு டைமிங் கிடைக்கவில்லை. ஆனால், 12-16 ஓவர்கள் அனைவருக்குமே சிரமமாகவே இருந்தன.

பார்ப்பதற்கே கடினமாக இருந்த ஆட்டம் நிச்சயமாக விளையாடுவதற்கு இன்னமும் கடினமாக இருந்திருக்கும். அதனால், என்னதான் அடிக்க வேண்டுமென நோக்கம் இருந்தாலும் வித்தியாசமாக முயற்சித்தாலும் இலக்கு பெரியதாக தொடங்கிவிட்டது.

டாப் 3, 4-இல் யாராவது சிலர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அங்கிருந்து ரன்கள் வரவேண்டும். அப்போதுதான் இறுதியில் ஆட்டத்தை முடிக்க முடியும்.

துபே எதிரணிக்கு சரியான நேரத்தில் ஆட்டமிழந்தார். அனைவருமே இப்படியாக தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்கள். வழக்கமாக 6-15 அல்லது 15- 20 ரன்களில் தோற்பது எரிச்சலாக இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com