பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது பற்றி...
சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
Published on
Updated on
1 min read

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளதால், ஆர்சிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

கர்நாடக பேரவை மாளிகை) முதல் சின்னசாமி திடல் வரை இன்று(ஜூன் 4) பேருந்து பேரணி நடத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் பங்கேற்கும் பாராட்டு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது கர்நாடக காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

இதையும் படிக்க: ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதி! ரசிகர்களால் திணறும் பெங்களூரு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com