
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தலைமைப் பொறுப்பு, பேட்டிங் தனித்தனியானது என்றும் அதைப் பிரித்து பார்ப்பதே நல்லது என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக சென்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச்.22இல் துவங்குகின்றன.
இந்நிலையில் ஷுப்மன் கில் போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
தலைமைப் பொறுப்பு, பேட்டிங் தனித்தனியானது
தலைமைப் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன்.
ஃபீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது தலைமைப் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.
கேப்டனாக இருப்பது சவாலானது
கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம்.
நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.
நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது.
எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.
260 ரன்கள் அடிப்போம்
கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை.
கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.
சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம்.
சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.