பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

43 வயதிலும் தோனிதான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர்: உத்தப்பா

முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனி குறித்து பேசியதாவது...

News image

எம்.எஸ்.தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :19 மார்ச் 2025, 1:09 pm

முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனி குறித்து 43 வயதிலும் அவர்தான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர் என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கடந்தாண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி கீப்பராகவும் பேட்டராகவும் மட்டுமே விளையாடி வருகிறார்.

264 ஐபிஎல் போட்டிகளில் 5,243 ரன்களை குவித்துள்ளார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு அவரது தலைமையில் கோப்பையை வென்றுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேசியதாவது:

ஐபிஎல் 2025-இல் தோனியின் அறிவாற்றலை பார்ப்போம்

தோனியைக் குறிப்பிட்டவரை, அவரது அறிவாற்றலின் முன்னோட்டங்களை நாம் பார்க்கவிருக்கிறோம் என நினைக்கிறேன்.

தோனி நம்.7 அல்லது நம்.8-இல் விளையாடுவாரென நான் எதிர்பார்க்கிறேன். கடைசி ஆண்டு போலவே இந்தாண்டும் 12-20 பந்துகளை விளையாடுவாரென நம்புகிறேன்.

தோனிக்கு கிரிக்கெட்டின் மீதான அன்பு குறையவில்ல, ஆர்வம் எப்போதுமே இறக்காது என நம்புகிறேன். அந்த ஆர்வமே அவரை இன்னும் விளையாட வைக்கிறது.

43 வயதிலும் தோனிதான் உலகத்திலேயே சிறந்த விக்கெட் கீப்பர்

43 வயதிலும் அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனபேன். அவ்வளவு திறமையும் ஆர்வமும் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். அப்படி இருக்கையில் எதுவுமே உங்களை தடுத்து நிறுத்தாது.

இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றாலும் நான் ஆச்சரியம் ஆகமாட்டேன். அதேவேளையில் அடுத்த 4 சீசன்கள் விளையாடினாலும் ஆச்சரியப்படமாட்டேன்.

சிஎஸ்கேவின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மார்ச்.23இல் சேப்பாக்கில் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.