மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?

ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா என்பதைப் பற்றி..

News image

கிரிக்கெட் திடல்...

Updated On :21 மார்ச் 2025, 11:52 am IST

கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மற்றும் தொடக்க விழா நிகழ்வுகள் மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, பிரமாண்ட தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் நடன நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் பாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போட்டி நடைபெறும் மாநிலமான மேற்கு வங்கத்தில் பிர்பும், நடியா, முர்ஷிதாம் உள்ளிட்டப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இன்னும் சில இடங்களில் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக கொல்கத்தாவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 22 வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

போட்டியின் தொடக்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 11 மணியளவில் 700 சதவிகிதம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி முழுமையாகப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட தொடக்கவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்படும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.