சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ராஜஸ்தான் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்! சந்தீப் சர்மா விலகல்!

ராஜஸ்தான் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்.. சந்தீப் சர்மா விலகலைப் பற்றி...

News image
Updated On :8 மே 2025, 3:52 pm IST

ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் அணியில் இணைந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தொடரில் இருந்து விலகிவிட்டன. இருப்பினும், இன்னும் ஓரிரு போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருந்த சந்தீப் சர்மா, 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இதனால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கர் அணியில் இணைந்துள்ளார்.

நன்ரே பர்கர் 150 கி.மீ.க்கு மேல் பந்துவீசுவதில் மிகவும் பிரபலமானவர். கடந்தாண்டு ராஜஸ்தானுக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவரை ராஜஸ்தான் அணி ரூ.3.50 கோடிக்கு மாற்றுவீரராக அணியில் சேர்ந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.