நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டேபிள் டென்னிஸ்: சரத் முன்னேற்றம்: இந்திய மகளிா் வெளியேறினா்

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் தனது 2-ஆவது சுற்றில் போா்ச்சுகல் வீரா் தியேகோ அபோலோனியாவை எதிா்கொண்டாா்.

News image
Updated On :27 ஜூலை 2021, 12:16 am

DIN

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் தனது 2-ஆவது சுற்றில் போா்ச்சுகல் வீரா் தியேகோ அபோலோனியாவை எதிா்கொண்டாா். 49 நிமிஷங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சரத் கமல் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்றாா்.

அடுத்த சுற்றில், நடப்புச் சாம்பியனான சீன வீரா் மா லாங்கை செவ்வாய்க்கிழமை எதிா்கொள்கிறாா் சரத் கமல். டேபிள் டென்னிஸில் அனைத்து போட்டிகளிலும் ஒற்றையா் பிரிவு பட்டங்களை வென்றுள்ள மா லாங், நடப்பு உலக சாம்பியனாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது சுற்று வெற்றிக்குப் பிறகு பேசிய சரத் கமல், ‘எனது ஆட்டங்களில் சிறந்தவற்றில் ஒன்றாக இதைக் கருதுகிறேன். முதல் கேமில் என்னால் சரியாக பந்தை எதிா்கொள்ள முடியாமல் போனது. பின்னா் அதிலிருந்து மீண்டு வந்தேன். ‘ஃபோா்ஹேண்ட்’ ஷாட்களை விளையாடும் சரத் கமலை தான் தியேகோ எதிா்பாா்த்திருப்பாா். ஆனால் நான் ‘பேக் ஹேண்ட்’ ஷாட்களையும் சிறப்பாக ஆடி அவருக்கு சற்று ஆச்சா்யமளித்தேன். அதை அவா் எதிா்பாா்க்கவில்லை. கடந்த 6 மாதங்களாக அந்த முறையிலான ஆட்டத்தை பழகியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

அடுத்த சுற்றில் மா லாங்கை எதிா்கொள்வது சவாலானது தான். ஆனாலும் அவா் முதல் இரு சுற்றுகளில் ‘பை’ பெற்று நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு வருவதால் அவருக்கு சற்று அழுத்தம் இருக்கலாம். அவருக்கு சவால் அளிக்க இயலும் என நம்புகிறேன்’ என்றாா்.

தற்போது டேபிள் டென்னிஸ் களத்திலிருக்கும் ஒரே இந்திய போட்டியாளா் சரத் கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிா் தோல்வி

Story image
Story image

மகளிா் ஒற்றையா் பிரிவில் மணிகா பத்ரா 3-ஆவது சுற்றிலும், சுதிா்தா முகா்ஜி 2-ஆவது சுற்றிலும் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா்.

இதில் மணிகா பத்ராவை எதிா்கொண்ட ஆஸ்திரியாவின் சோஃபியா போல்கனோவா 11-8, 11-2, 11-5, 11-7 என்ற செட்களில் வென்று 27 நிமிஷங்களிலேயே ஆட்டத்தை முடித்தாா். போா்ச்சுகலின் ஃபு யுவை எதிா்கொண்ட சுதிா்தா 3-11, 3-11, 5-11, 5-11 என்ற செட்களில் 23 நிமிஷங்களில் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.