எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஒலிம்பிக்: இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா?

கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி போல் துப்பாக்கி சுடும் வீரர் ஸ்வப்னில் குசேல் வாழ்க்கையும் இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஸ்வப்னில் குசேல், எம்.எஸ்.தோனி

Updated On :31 ஜூலை 2024, 6:51 pm IST

மகாராஷ்டிர மாநிலம் கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான ஸ்வப்னில். 2012 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தற்போது இந்தியாவின் சார்பாக 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தகுதிச் சுற்றில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தோனி இரயில்வேயில் பணியாற்றி மிகப்பெரிய கிரிக்கெட்டராக மாறினார். அதேபோல் ஸ்வப்னிலும் 2015இல் இரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக எம்.எஸ்.தோனி 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் கேப்டன்சி (தலைமைப் பண்பு) அவரின் நடத்தைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.

மிகவும் பொறுமையாக இருப்பதும் அமைதியாக இருப்பதும் துப்பாக்கி சுடுதலில் மிகவும் முக்கியமானது. தோனியும் அதில்தான் சிறப்பானவர்.

இந்நிலையில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஸ்வப்னில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

துப்பாக்கி சுடுதலில் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் பின்பற்றமாட்டேன். ஆனால் அதையும் தாண்டி, எனக்கு தோனி என்றால் மிகவும் பிடிக்கும். எனது விளையாட்டில் அமைதியையும் பொறுமையையும் மிகவும் தேவைப்படும் அது தோனி களத்தில் இருப்பதைப் போலவே இருக்கும். மேலும் நானும் ஒரு டிக்கெட் கலெக்டராக இருந்ததால் அதையும் தோனியுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை சுடுவதும் புதியதுதான். சுடும்போது பொறுமையாக இருக்க முயற்சிக்கிறேன். போட்டி முழுவதும் இதே மனநிலையில் இருக்க விரும்புகிறேன். அமைதியாக சுடுவதில் கவனம் செலுத்துகிறேன். மனதில் எவ்வளவு புள்ளிகள் என்ற யோசனை இருந்தாலும் அதை கவனிக்காமல் இருப்பது நல்லது.

மானு பாக்கர் சிறப்பாக விளையாடினார். அவரால் முடியும்போது எங்களாலும் முடியுமென நினைக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.