‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

டி20: இந்தியா அபார சாதனை; இலங்கை மிக மோசமான சாதனை!

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள். - Kunal Patil

Published On :

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா ‘சூப்பா் ஓவா்’-இல் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்தியா கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, இலங்கையும் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் சோ்த்ததால், ஆட்டம் ‘டை’ ஆனது.

இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில், முதலில் இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 ரன்கள் சோ்க்க, இந்தியா ஒரே பந்தில் பவுண்டரியுடன் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக பெற்ற அதிக வெற்றிகள் (22 வெற்றிகள்) பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 23 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.

மேலும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணியாகவும் சாதனை படைத்துள்ளது.

32 போட்டிகளில் சூப்பர் ஓவர் உள்பட இலங்கை அணியிடம் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

இலங்கையின் மோசமான சாதனை என்ன தெரியுமா?

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது என்றால் அது இலங்கை அணிதான். இதுவரை 105 போட்டிகளில் (சூப்பர் ஓவர் போட்டிகள் உள்பட) தோல்வியுற்று மோசமான சாதனை படைத்துள்ளது. 104 தோல்விகளுடன் வங்கதேச அணி 2ஆம் இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.