பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தக்கவைத்துக் கொள்வதாகக் கூறி ஏலத்தில் தன்னைப் புறக்கணித்த ஆர்சிபி மீது கிறிஸ் கெயில் தாக்கு!

அவர்களுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டேன். அது பரவாயில்லை... 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:24 pm IST

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நான்கு ஆட்டங்களில் 252 ரன்கள். ஒரு சதம் மற்றும் இரு அரை சதங்கள். 23 சிக்ஸர்களுடன் உள்ள ஸ்டிரைக் ரேட் - 161.53.

பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும் கிறிஸ் கெயில், ஐபிஎல் ஏலத்தில் தன்னை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்யாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் கெயில் கூறியதாவது: 

ஆர்சிபி அணியின் மிகப்பெரிய நட்சத்திரம் நான் தான். என்னைத் தேர்வு செய்வது குறித்து அவர்கள் பேசினார்கள். ஆனால் அதைச் செய்யாமல் விட்டது வருத்தமான ஒன்று.

என்னை அணியில் சேர்க்க அவர்கள் விரும்பினார்கள். என்னைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் என்னை அழைக்கவே இல்லை. எனவே அவர்களுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டேன். அது பரவாயில்லை. 

இதுகுறித்து யாரிடமும் என்னால் சண்டை போட முடியாது. கரீபியன் பிரீமியர் லீக், வங்தேச பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளில் நான் மிகச்சிறப்பாக விளையாடினேன். புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது. 21 சதங்கள். அதிக அளவிலான சிக்ஸர்கள். இவை கிறிஸ் கெயிலின் திறமையை வெளிப்படுத்தாவிட்டால் வேறு எது என்னை வெளிப்படுத்தும் என்று தெரியவில்லை

ஏலத்தின் ஆரம்பக்கட்டத்தில் என்னை யாரும் தேர்வு செய்யாதது ஆச்சர்யமாகவே இருந்தது. நான் பஞ்சாப் அணிக்கு ஆடவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதுபோல. 

டி20 கிரிக்கெட்டின் பல சாதனைகள் என் வசம் உள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டியையும் அடுத்த வருட ஒருநாள் உலகக் கோப்பையையும் வெல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதுவரை ஐபிஎல் போட்டியை பஞ்சாப் அணி வென்றதேயில்லை. எங்களுடைய உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர். அவருடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்துவது மிகவும் ஆச்சர்யமானது. எனவே அவர் இந்த வருட ஐபிஎல் கோப்பையை அவர் கையில் ஏந்தவேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.