மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 391/4; ஒரு ரன்னில் 'டபுள் செஞ்சுரியை' தவற விட்ட ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:36 am

DIN

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது.அபாரமாக விளையாடிய ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவற விட்டார்.

இந்தியாவில் சுற்று பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி , தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  477 ரன்கள் எடுத்து.

பின்னர் நேற்று தந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பார்த்திவ் படேல் 28 ரன்களுடனும், ராகுல் 30 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று இன்று இந்தியா தனது ஆட்டத்தை தொடர்நது. சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும், அரைசதம் அடித்தனர். நன்கு விளையாடி வந்த பார்திவ் படேல் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் அணித்தலைவர் கோலி ஆகிய இருவரும் அதிக நேரம் நிலைக்காமல்   வெளியயேறினார். ஆனால் சிறப்பாக விளையாடிய ராகுல் இந்திய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இது அவரது 4-வது சதமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு சிட்னி டெஸ்டில் சதம் அடித்தார். அதன்பின் இலங்கை தொடரில் கொழும்பில் நடைபெற்ற டெஸ்டில் சதம் அடித்தார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்தார்.

பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய அவர்  98 பந்துக்களில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

அபாரமாக ஆடி வந்த ராகுல் இரட்டை சதம் எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் 199 ரன்கள் எடுத்திருந்த பொழுது, ரஷீத் பந்து வீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 311 பந்துகளில், 16 பவுண்டரிகள் , மூன்று சிக்சர்களுடன் 199 ரன்களை எடுத்திருந்தார்.

இறுதியாக ஆட்ட நேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்களை எடுத்திருந்தது.    கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 86 ரன்கள் பின்தங்கி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.