டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 28 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 12 ஆட்டங்களும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 10 ஆட்டங்களும், திருநெல்வேலியில் 9 ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். செப்டம்பர் 18-ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே, 40 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், கடைசி 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள். இதுவரை மேத்யூ ஹேடன், ரெய்னா, பிரெட் லீ ஆகியோர் டிஎன்பிஎல் போட்டியை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கெய்ல், பிராவோ ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். சென்னை வேலம்மாள் பள்ளிக்குச் சென்று இருவரும் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்கள். அடுத்ததாக, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிற காரைக்குடி - மதுரை இடையேயான போட்டியையும் இருவரும் காண உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



