16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

4-ஆவது முறையாக ரொனால்டோ முதலிடம்

"உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள்' பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4-ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Published On :

"உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள்' பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4-ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவரும், பார்சிலோனா அணி வீரருமான லயோனல் மெஸ்ஸி, 2-ஆவது இடத்தைப் பிடித்தார். பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரிஸ்மான் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரான்ஸ் கால்பந்து இதழ் வெளியிடவிருந்த நிலையில், திங்கள்கிழமை சில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சி குறித்து ரொனால்டோ கூறுகையில், "ஒரு கனவு மீண்டும் நிஜமாகியுள்ளது. 4-ஆவது முறையாக இந்த விருதை பெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது அணியின் சக வீரர்கள், ரியல் மாட்ரிட் அணி, இதர மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.