

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்னுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது மும்பை வீரர் ஜோஸ் பட்லரின் கேட்ச்சை பிடிக்க முற்பட்டபோது, அவருடைய தோள்பட்டையில் அடிபட்டது. இதையடுத்து முடநீக்கியல் நிபுணரின் சிகிச்சைப் பிறகு தொடர்ந்து விளையாடினார் கிறிஸ் லின். கடந்த 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இடது தோள்பட்டையில் காயமடைந்துள்ளார் கிறிஸ் லின். இந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தப் போட்டியில் மும்பைக்கு எதிராக 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ், இதுபற்றி கூறியதாவது: கிறிஸ் லின்னுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருடைய காயத்தின் நிலை பயந்ததுபோல இல்லை. எங்கள் மருத்துவர்கள் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்துவருகிறார்கள். எனவே இந்த ஐபிஎல்-லில் அவர் மீண்டும் விளையாட வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.