ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஹைதராபாத் டெஸ்ட்: முரளி விஜய், கோலி சதம்; இந்தியா ரன் குவிப்பு! 

வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்ட நேர முடிவில்  இந்தியா மூன்று விக்கட்டுகளை இழந்து 356 ரன்களை எடுத்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2017, 12:42 pm

DIN

ஹைதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்ட நேர முடிவில்  இந்தியா மூன்று விக்கட்டுகளை இழந்து 356 ரன்களை எடுத்துள்ளது. முரளி விஜய் மற்றும் விராத் கோலி ஆகிய இருவரும் சதமடித்தனர்.

இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைதொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய்,  கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

அதில் ராகுல் வந்த வேகத்திலேயே முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்து வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது பந்துவீச்சில் போலடாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய புஜாரா, முரளி விஜய்யுடன் இணைந்து பொறுப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தினால் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்டந்த இருவரும் தங்களது அரை சதத்தை நிறைவு செய்தனர். ஆனால் அதற்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ஹாசன் மிராஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து புஜாரா ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 178 ரன்களை குவித்தனர். 

அதற்கு பிறகு முரளி விஜயுடன் அணித்தலைவர் விராட் கோலி இணைந்தார். இந்த இருவரும் சேர்ந்து தொடர்ந்து வங்கதேச பந்து வீச்சு சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 149 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

சதமடித்த சிறிது நேரத்திலேயே தைஜூல் இஸ்லாம் வேகப்பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்   பின்னர் கோலியுடன் ரஹானே இணைந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அணித்தலைவர் கோலியும் சதமடித்தார். அவர் 130 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள்  அடங்கும்.

பின்னர் கோலி மற்றும் ரஹானே இருவரும் தொடர்ந்து ஆட்ட நேர இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர இறுதியில் விராத் கோலி 111 ரன்களுடனும், ரஹானே 45 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.