ஹைதராபாத் டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 477/4
வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது இந்தியா 4 விக்கட்டுகளை இழந்து 477 ரன்களை எடுத்துள்ளது.


ஹைதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது இந்தியா 4 விக்கட்டுகளை இழந்து 477 ரன்களை எடுத்துள்ளது.
மூன்று விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இந்தியா தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை துவக்கியது. சிறப்பாக விளையாடி வந்த ரஹானே 73 பந்துகளில் அரைசதம் அடித்தார். 98.1 ஓவர்களில் இந்தியா 400 ரன்களைக் கடந்தது. 82 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹானே தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் மேஹதி ஹாஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் கோலியுடன் விரிதிமான் சஹா இணைந்தார்.
உணவு இடைவேளையின் பொழுது இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் எடுத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...