ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘தங்க மகன்’ லட்சுமணனுக்கு ரூ. 20 லட்சம்: அரசு அறிவிப்பு!

ஆசியத் தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று...

News image
Updated On :10 ஜூலை 2017, 9:52 am

எழில்

ஆசியத் தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

22- ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லஷ்மணன் 14 நிமிடம் 54.48 நொடிகளில் பந்தைய தூரத்தை எட்டி தங்கத்தை சொந்தமாக்கினார். 

புதுக்கோட்டை மாவட்டம் சொக்குராணி கிராமத்தைச் சேர்ந்த வீரரான லஷ்மணன் இந்த வெற்றி குறித்து கூறுகையில், 'எப்போதும் ஓரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனாகவும், கடின உழைப்பாளியாகவுமே இருக்க விரும்புகிறேன். அதன் பலனாகவே தற்போது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது' என்றார்.
 இந்த வெற்றியின் மூலமாக, லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு லஷ்மணன் தகுதிபெற்றுள்ளார்.

போட்டியின் 4-ஆவது நாளில் லட்சுமணன் மற்றொரு தங்கம் வென்றார். லட்சுமணன், 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த நிலையில், இப்போது 10,000 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை செய்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 10,000 மீ. ஓட்டத்தில் லட்சுமணன் 29 நிமிடம், 55.87 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்தியரான கோபி வெள்ளி (29:58.89) வென்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் சொக்கூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், உதகையில் உள்ள மெட்ராஸ் (ரெஜிமென்ட்) ராணுவ படைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

இரு தங்கப் பதக்கங்கள் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதேபோல 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவுக்கு ரூ. 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.